25 ஏப்., 2013

சகவாசம்...

Photo : KRP Senthil
சகவாசம் என்றால் என்ன என்பது மாதிரியான ஆராய்ச்சிகளை நிறையபேர் நிறைய மாதிரி செய்திருக்கிறார்கள். அத்தனையும் அவர்களின் சொந்த அனுபவத்தில் கிடைத்த பேரதிர்ச்சிகளாக இருப்பதற்கான காரனம் அவர்கள் உதிர்க்கும் தத்துவ முத்துக்கள் அ வாந்திகள் மூலம்,  அதன் வரலாறு அறியப்படுகிறோம். இப்படித்தான் சின்ன வயசுல...ன்னு ஆரம்பித்து ரம்பமாக நம்மை கூறு போடும் ஜந்துக்கள் அவை அ அவர்கள். ஆனாலும் பாலியல் கதைகளைக்காட்டிலும் சில கதைகள் ஒரு படி கீழிறங்கி சுவராஸ்யமாக அமைந்துவிடுகின்றன. அடுத்தவன் அவஸ்த்தைப்பட்டால் அதைவிட சுவாரஸ்யம் வேறெங்கும் கிட்டாது.
இப்படித்தான் நண்பன் ஒருவன் தனது அடுத்த படத்துக்கான கதையை என்னிடம் சொல்ல ஆரம்பித்தான். கவனிக்க அவன் சொன்ன மாதிரியே சொன்னால் நீங்கள் அனேகமாக இந்தப்பத்தியில் இருந்து விலகிவிட நேரிடும் என்கிற அபாயம் இருக்கிறது. எனவே சுருக்கமாக:
கதை நாயகன்: ஒரு சாக்கடை அள்ளும் தொழிலாளி.
கதை நாயகி: ஹன்சிகா மோத்வானி மாதிரி ஒரு பேரழகி (சைசிலும்).
கதை: நாயகிக்கு ஒரு காதல் தோல்வி இருக்கும்போதே குடும்ப வறுமை காரனமாக நாயகனுக்கு வாழ்க்கைப்பட நேர்கிறது. ஆனாலும் நாயகன் செய்யும் தொழில் பிடிக்காததால் இருவரும் இணை சேராமல் இருக்கிறார்கள்...  அலோ எங்க ஓடுறீங்க. அதுக்குள்ளயும் முழுக்கதையும் புரிஞ்சிடுச்சா என்ன?

கிளைமாக்ஸ் : இப்படி ஒரு பெயரில் காண்டம் விற்பது கூட தெரியாத எதிர்கால சினிமாவை தீர்மானிக்கப்போகிற டைரக்டராக அவன் எப்படி வரப்போகிறான் என்கிற சந்தேகம் எனக்கு இருந்தாலும். முடிவு அவன், நான், நீங்கள் மற்றும் கோடானு கோடி தமிழ் ரசிகர்கள் தெரிந்து வைத்திருப்பதுதான்.

” நாயகனை, நாயகி ஏற்றுக்கொண்டு விடுவாள்” ஆனால் கதைப்படி என்பதையும் தாண்டி ஹன்ஸிகா மாதிரி ஒரு அழகி சாக்கடை எல்லாம் எப்படி இனி அள்ளப்போகிறாள்” என்கிற எனது கவலையை அன்றைய தினம் கதை சொன்ன எதிர்கால டைரக்டருடன் டாஸ்மாக் சரக்கு அடித்து தீர்த்துக்கொண்டேன்.
பிரபல திரை விமர்சகரிடம் இந்தக்கதையை சொன்னபோது ரொம்ப அசிங்கமா இருக்கிற உதவி இயக்குநர்கள் எல்லோரிடமும் இப்படி ஒரு கதை இருக்கும் என சொன்னார். ”ஏங்க அழகுன்னா அது செவப்பா இருக்கிறதா?” என ரொம்ப அப்பாவியாக கேட்டேன்.

“ஃபேர் அண்டு லவ்லி பத்தி நீ என்ன நெனக்கிரே?”ன்னு கேட்டார். அது ஏன் எல்லாரும் நாம ஒரு கேள்வி கேட்டா அதுக்கு பதில் சொல்லாம, அவங்க நம்மகிட்ட ஒரு கேள்வி கேக்குராங்க??

ரொம்ப போரடிக்கிறேன்ல,
சகாக்களை நாம் தண்ணியடிக்கும்போது விரிவாக அறியலாம்:

முதல்வகை: முதல் கட்டிங்கில் ரொம்ப தெனாவெட்டாக சப்ளையரை கூப்பிடும் அத்தனை பிதாமகன்களும் மூன்றாவது உள்ளிறங்கி ரசவாதம் ஆனபின் சப்ளையரை அண்ணா, மாப்ள, தலைவா ரேஞ்சுக்கு உயர்த்தி கடைசியில் நம் பாக்கெட்டில் இருந்து 100 ரூபாய் கொடுத்து வள்ளல் ஆகிறவர்கள்.
அடுத்த வகை:ஆங்கிலத்தை எல்லா மொழிகளுடனும் மிக்சியில் அரைப்பார்கள். இந்த பயலுகளுக்கு ஆங்கிலம் நல்லாத்தெரிந்த ஒரு பிகரை உஷார் பன்னமுடியாத ஆதங்கம். ஆனா பாருங்க சப்ளையருங்களுக்கு மட்டும் இவனுங்க மொழி அத்துப்படி.
மூனாவதா ஒருத்தன் இருக்கான் பாருங்க அவந்தான் வெரி டேஞ்சரஸ் ஃபெலோ. பிளான் பன்னியே குடிக்கிறவனுங்க. தனக்கான பிராண்டில் ஆரம்பித்து, மிக்சிங், சைட் டிஷ் கடைசியாக ஒரு ஃபுல் பிரியாணி என தன் தேவையை சரியாக தெரிந்து வைத்திருக்கும் ஆளு. சாப்பாடு முடிஞ்ச ஒடனே அவன் மொபைலுக்கு அவென் பொண்டாட்டியிடமிருந்து(என்னா ஒரு டைமிங்கு) போன் வரும்.  பயளும் ரொம்ப நல்லவனா மாறி எல்லாருக்கும் வணக்கம் வச்சிட்டு ஆட்டோக்கு பணம் வாங்கிட்டு போயிடும். அதுலயும் நாலு கிலோ மீட்டர்ல இருக்கிற அவென் வீட்டுக்கு போக எல்லா ஆட்டோக்காரரும் 200 ரூவா வாங்குவாங்கன்னு இவென் சொல்றத போதையில இருக்கிற மத்த பயளுங்க எப்படி நம்புறானுவன்னு இன்னி வரைக்கும் புரியல.

என்னிய மாதிரி ஆளுங்களுக்கு பெரச்சனை இல்ல. எவ்ளோ போட்டாலும் என் பைக் வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்திடும்.
ஆனா பாருங்க இந்த டாஸ்மாக் சரக்கு அவ்ளோவும் டூப்ளிகேட்தான் மறுநா முதுகு ஏன் வலிக்குதுன்னு தெரியல. தல சாருவும் இதே கம்ப்ளெயிண்ட் பன்றாரு. அதனால இப்பல்லாம் தமிழ்நாட்டு சரக்கு அடிக்கிறதே இல்ல. எவனாவது காசு கொடுத்து ஸ்லோ பாய்ஷன் வாங்குவானா?.
இதனால மான்புமிகு, இதயதெய்வம், புரட்சித்தலைவி, தமிழக முதல்வர், அம்மா அவர்கள் என்போன்ற என்னற்ற பயபுள்ளைகளை திருந்த வாய்ப்பளித்த காரனத்தால் “அம்மா ஆட்சியே நல்லாட்சி” என அப்துல்லா, அபிஅப்பா, சவும்யன், லக்கி, ப்ரகாஷ் போன்ற உ.பி க்களுக்கு சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

இப்படி சகவாசம் எண்ணிலடங்கா நன்மை, தீமைகளை கலந்துகட்டி நம்மை செம்மைபடுத்தவே செய்கிறது என்று சொன்னால் மிகையாகாது!!

எங்கூர்ல எனக்கு ஒரு அத்தை இருந்தாங்க. ரொம்ப வயசானவங்க, கெட்ட வார்த்தைகளை கவிதையா பேசுவாங்க, அதேமாதிரி கோவம் வந்தா கடுமையான சாபமும். இப்பிடியாப்பட்ட அத்தைக்கு பரம சாதுவான ஒரு புருஷன்  எங்க மாமா. அவரும் சின்னப்பசங்க மாதிரி நாங்க சொன்ன அவ்வளவு வேலையும் செய்வாரு, ராவானா வயக்காட்டுல  நாங்க இளவட்டங்க தண்ணியடிப்போம், பகல்ல நரிக்குறவனிடம் காசு கொடுத்தால் அன்றைய தினம் கிடைக்கும் பறப்பன, நடப்பன, ஊர்வன இப்படி ஏதாவது ஒன்னு கொண்டுவந்து தருவான். அதுதான் அன்றைய ராத்திரி சைடு மற்றும் மெயின் டிஷ்.  அப்புறம் ரொம்ப நாளைக்கு நரிக்குறவன் எங்கூர் பக்கம் வரல. ஒரு நாள் எங்க கூட்டாளி நல்ல சேவலா பாத்து ஒன்ன ஆட்டைய போட்டு வந்துட்டான். மாமாதான் வெவரனையா சமைச்சு கொடுத்தாரு. சட்டிய கழுவவே தேவையில்லாத அளவுக்கு மிச்சம் சொச்சத்தையும் அவரே முடிச்சாரு. ஆனா பாருங்க அடுத்த நாள் ”கீழால போயிட்டே இருக்குடா” ன்னு வயக்காட்டுலயே படுத்துட்டாரு.

அப்ப கோழிய ஆட்டைய போட்டு வந்த சேக்காளி விழுந்து, பொரண்டு சிரிச்சான்.

“ஏண்டான்னு” பொரடில ஒன்னு செல்லத்தட்டா மாமா தட்டி கேட்டாரு?

”அதில்ல மாமா, அத்தெ விட்ட சாபம் ஒனக்கு மட்டும் பலிச்சிருச்சின்னு” மறுபடியும் விழுந்து சிரிச்சான்.

அப்பத்தான் தெரிஞ்சது பய மாமா வீட்டு கோழியத்தான் ஆட்டைய போட்டிருக்கான்னு!?

ஏன்னா அத்தை வையுற மொத வார்த்தையே “ பேதில போவான்னு!” தான்.

”இதுக்குத்தான் சின்னப்பசங்க கூட சகவாசம் வச்சிக்ககூடாதுடான்னு!” சொல்லி தலையில அடிச்சிகிட்டாரு மாமா

5 கருத்துகள்:

நாய் நக்ஸ் சொன்னது…

:)
:)
:)

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

”அதில்ல மாமா, அத்தெ விட்ட சாபம் ஒனக்கு மட்டும் பலிச்சிருச்சின்னு” மறுபடியும் விழுந்து சிரிச்சான்//

ஹா ஹா ஹா ஹா பாவம் அந்த மாமா...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

ரைட்டு...

Unknown சொன்னது…

பார்ல உக்காந்து கத கேட்ட பீலிங்....!

வவ்வால் சொன்னது…

கே.ஆர்.பிஜி,

நம்ம கோலிவுட் ஆட்கள் படம் தின்று படம் எடுப்பவர்கள் அதான் இப்படியான கதைகளாக உருவாகுது.

ஓஹோ புரொஃடெக்‌ஷன்ஸ் நாகேஷ் சொன்னது தான்,'நான் எடுக்கிறது தான் படம், அதை பார்க்கிறது மக்களின் விதினு' அதான் இப்போ நம்ம ஊரில நடக்கிறது :-))

# ஃபுல்லாக வாங்கினால் கலப்படம் குறைவு ,அதுவும் பாட்டில் மூடியில் டிஸ்பென்ஸர் டைப் ஆக இருந்தால் நல்லது...ஹி ஹீ எல்லாம் ஒரு அனுபவந்தேன் :-))