2 டிச., 2011

சுவர்க்கோழிகள் விழித்திருக்கும் நள்ளிரவில்...


thanks : the hindu 

இந்த இரவு 
மிக விரைவாய் முடிந்து கொண்டிருக்கிறது 
இதற்கு முந்தைய நாளின் பகலில்
நீ எனக்களித்த வாக்குறுதியை நம்பி 
என் வாழ்வை துவக்கி வைத்தவர்களை 
முடிவாக்கி 
உன்னுடன் ஒரு புதிய வாழ்வை துவங்கப்போகிறேன் 
நாம் 
நம் காதலில் உறுதியாக இருந்தோம் 
நம் உறுதியில் அவர்கள் எதிர்ப்பின் பலம் தெரிந்தது 
நாம் பலவீனமானவர்கள் 
நம் காதல் பலமானது 
பலவீனமான நாம் 
பலமான நம் காதலை நம்பி 
ஒரு 
புதிய வாழ்வினை துவங்கப்போகிறோம்
இந்த இரவு முடிவதற்குள் 
நான் என் வாழ்வின் முதல் அடியை 
துவங்கப்போகிறேன் 
எனது வீட்டில் தங்கள் மேல் உள்ள அதீத 
நம்பிக்கையில் 
உறங்கிக்கொண்டிருக்கின்றனர்
இன்னும் சற்று நேரத்தில் நீ வந்துவிடுவாய் 
சுவர்க்கோழிகள் பயமுறுத்தும் இந்த ராத்திரியின் முடிவில் 
ஒரு துக்கம் அரங்கேறும் 
அவர்கள் என்னைத்தேடலாம் 
தொலைத்து தலைமுழுகிவிட்டதாக 
ஆறுதல் தேடிக்கொள்ளலாம் 
ஆயினும் 
இத்தனை வருட பந்தத்தை அறுத்த 
இந்தக்காதலை 
என் தலை முறை அனுபவிக்கும் 
தவறாகவும் 
சரியாகவும் 
சமயங்களில் 
வாழ்வின் பாடமாகவும்..   

6 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

எமக்குப் பலமான தெய்வீகமான காதல் வரும் தலைமுறைக்குச் சரியான பாடத்தைக் கொடுக்குமா.அருமையான வார்த்தைகளோடு ஒரு கவிதை !

Yaathoramani.blogspot.com சொன்னது…

அறுத்த இந்தக்காதலை என் தலை முறை அனுபவிக்கும் தவறாகவும் சரியாகவும் சமயங்களில் வாழ்வின் பாடமாகவும்

அருமையான படைப்பு
இரு நிலைகளையும் மிக அழகாகச் சொல்லிப் போகும்
விதம் மிகவும் கவர்ந்தது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1

ம.தி.சுதா சொன்னது…

ஃஃஃஇந்த இரவு முடிவதற்குள்
நான் என் வாழ்வின் முதல் அடியை
துவங்கப்போகிறேன் ஃஃஃஃ

எழப்போகிறோம் என்ற நம்பிக்கையே என்றும் எழ வைக்குமல்லவா...

சிறப்பான வரிகள் சகோ....

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு (21.11.2011-27.11.2011)

Muruganandan M.K. சொன்னது…

"..இத்தனை வருட பந்தத்தை
அறுத்த இந்தக்காதலை
என் தலை முறை அனுபவிக்கும் .."
மனசை ஏதோ செய்ய வைக்கும் வரிகள்.
நல்ல படைப்பு

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

மெளனம்

ரமேஷ் வீரா சொன்னது…

அண்ணா கவிதை அருமை ..........