22 செப்., 2010

வீரப்பதேவர்...

வீரப்ப தேவருக்கு 
தினமும் ஒரு பஞ்சாயத்து..
வாய்க்கா, வரப்பு தகாராறு 
புருஷன், பொண்டாட்டி பிணக்கு 
அங்காளி, பங்காளி பிரச்சினை என 
தீர்த்துவைக்கும் வழக்குகள் ஏராளம் 
முறுக்கிய பெரிய மீசையும் 
கட்டு சிட்டான ஆகிருதியும் 
கட்டைக் குரலும் கொண்ட அதிகார பெரிசு 
அவர்...

பஞ்சாயத்து முடிந்த மறுநிமிடம் 
பிராது கொடுத்தவர் தந்த சாராய விருந்தை 
ஏற்றுக்கொண்டாலும் 
நியாத்தின் பக்கம்தான் தேவர்..

உள்ளூர் பிரச்சினை முதல் 
உலகப் பிரச்சினைவரை 
அவருக்கென்று தனிப்பட்ட கருத்து இருக்கும் 

இதற்க்கு நேர்மாறாக 
தேவரின் வீட்டில்...

33 கருத்துகள்:

ஜோதிஜி சொன்னது…

இன்னும் தொடர்ந்து கொண்டு போயிருக்கலாம்.

Sriakila சொன்னது…

//இதற்க்கு நேர்மாறாக
தேவரின் வீட்டில்...//

முடிந்துவிட்டதா? முடியவில்லையா?

கொஞ்சம் புரியவில்லை.

வினோ சொன்னது…

அண்ணே இது நீங்களா? (oru doubt தான் )

vinthaimanithan சொன்னது…

ம்ஹூம்... நல்லா வெச்ச சாம்பார்ல கடேசியா உப்பு மட்டும் இல்ல!

என்னது நானு யாரா? சொன்னது…

அட! கவிதையை இப்படி எளிமையாக் கூட எழுத முடியுமா?

அன்பரசன் சொன்னது…

//இதற்க்கு நேர்மாறாக
தேவரின் வீட்டில்...//

தொடர்ந்திருக்கலாம் தல.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

avarr vilaasam kidaikkumaa?

ஹேமா சொன்னது…

எல்லார் வீடுகளிலயும் இப்படித்தான் செந்தில்.சும்மா வாய்ச்சவுடால் !

நவன் சொன்னது…

Panam ennanne aachchu?

'பரிவை' சே.குமார் சொன்னது…

கவிதையும் அதற்கான படமும் அருமை நண்பா.
எங்க பக்கத்துலயும் பஞ்சாயத்து சிங்கள்கள் எல்லாம் வீட்டுக்குள் வாலாட்டியபடிதான்....

நல்லாயிருக்கு... இன்னும் கொஞ்சம் வரிகளை இணைத்திருந்தாலும் வலுவாகியிருக்கும்.

அலைகள் பாலா சொன்னது…

கவிதை
எளிமை
அழகு


அடடே ஆச்சர்யக்குறி !!!!!!
எனக்கும் கவிதை வருது.

Anisha Yunus சொன்னது…

//இதற்க்கு நேர்மாறாக தேவரின் வீட்டில்...//

கடசில என்னன்னு புரிஞ்சுக்கறது?

நேசமித்ரன் சொன்னது…

சாராயம் அவரை த் தொட்டுக் கொண்டது குடும்பத்தைப் போல :)

vasu balaji சொன்னது…

:)). எனக்கு கடைசி வரிகள் பிடிச்சது.

GSV சொன்னது…

Nice !!!

PB Raj சொன்னது…

செந்தில்,

கடைசி வரிகள் உண்மை என்னகு இது மாதிரி நிறைய பேரை தெரியும்

காமராஜ் சொன்னது…

அசத்தல் செந்தில்.கடைசி வரியில் கதை,கவிதை ஆரம்பிக்கிறது.

Vela சொன்னது…

அண்ணா .. படங்களின் தேர்வுக்கே தனி மதிப்பெண்

மதன்செந்தில் சொன்னது…

அருமை.. கடைசி வரிக்குப்பின் தான் கவிதையே ஆரம்பிக்கிறது.

ஜெ.மோ சொன்னது கவிதைகளில் சொல்லவந்ததை முழுவதும் சொல்ல தேவை இல்லை, ஆனால் படிப்பவனின் கற்பனையை தூண்ட வேண்டும்..

அந்த வகையில் உங்க கவிதை சூப்பர்..

www.narumugai.com

Mohan சொன்னது…

கவிதை நல்லாயிருக்குங்க!

மங்குனி அமைச்சர் சொன்னது…

//இதற்க்கு நேர்மாறாக
தேவரின் வீட்டில்...//

அங்க இவரு பாச்சா பலிக்காதுள்ள....... ஹி.ஹி.ஹி

கவி அழகன் சொன்னது…

ஆனைக்கும் அடி சறுக்கும்
கதை போல் கவிதை
வாழ்த்துக்கள்

கவி அழகன் சொன்னது…

ஆனைக்கும் அடி சறுக்கும்
கதை போல் கவிதை
வாழ்த்துக்கள்

சசிகுமார் சொன்னது…

அருமை நண்பா என்னைக்கு தான் ஆம்பள சொல்றத வீட்ல கேக்குறாங்க

VELU.G சொன்னது…

நல்லாயிருக்குங்க

வீட்டில யாருக்குங்க சொந்த கருத்து இருந்திருக்கு

அருண் பிரசாத் சொன்னது…

தொடருமா? குழப்புதே!

Asiya Omar சொன்னது…

கவிதையில் மீதி நாளை தொடரும் தானே!

பரதேசி சொன்னது…

எல்லாம் மேல இருக்கவன் பாத்துக்குவான்..வேற என்னத்த சொல்ல...அம்புட்டுதேன்.

பெயரில்லா சொன்னது…

ரொம்ப எளிமையா இருக்கு அண்ணே!

http://thavaru.blogspot.com/ சொன்னது…

கவிதையை கரெக்டா முடிச்சிட்டீங்க....

ரோஸ்விக் சொன்னது…

வீரப்ப தேவருக்கு வீட்டுக்குள்ள போன பீவரு போல ;-)

வீட்டுல எலி வெளில புலி !!!

தினேஷ்குமார் சொன்னது…

நல்ல நடைமுறைக் கவிதை

"உழவன்" "Uzhavan" சொன்னது…

தேவரின் வீட்டில் மட்டுமா?? :-)