9 ஜன., 2009

'' பெட்ரோல் தட்டுப்பாடு ''

சென்னையில் எல்லா பெட்ரோல் பங்குகளையும் மூடிவிட்டனர் , பரவலாக தமிழ்நாடு முழுக்க அப்படிதான் , அனைத்து இந்திய லாரி உரிமையாளர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே போராட்டத்தை அறிவித்து விட்டனர் , ஆனால் இதுவரை அரசு தூங்கிக்கொண்டு இருக்கிறது , மேலும் உரிமையை ரத்து செய்வோம் என்று அறிவிக்கிறது , சென்னையில் அனைத்து காய்கறிகளும் கடுமையான விலை விற்கிறது ,ஆட்டோக்கள் வைத்துதான் கட்டணம் , கச்சா எண்ணெய் கடுமையாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது ,ஆனால் விலை ஏறும்போது உடனே விலை ஏற்றுகிற அரசு , இறங்கும்போது குறைக்க மறுக்கிறது ,
நமது பொருளாதார நிர்ப்பந்தங்களை வெளிப்படையாக அறிவிக்காமல் மன்னராட்சி போல செயல்படுகிறார்கள் , தமிழக அரசியல்வாதிகளுக்கு தற்போது திருமங்கலம் இடைதேர்த்தல்தான் முக்கியம் ,
அங்கு இலங்கையில் தமிழன் சாகிறான் , அதைப்பற்றியும் நமக்கு கவலை இல்லை , நாலு நாளைக்கு இந்த அரசியல்வதிகளைப்பற்றி பேசுவோம் , அப்புறம் அடுத்த பிரச்சினை வந்துவிடும் , நாடு எங்கோ போகிறது , யாருக்கும் நிற்ககூட நேரமில்லை , ஓடிக்கொண்டே இருக்கிறோம் , நின்று யோசிக்கவிட்டால் நமக்கு எப்படியும் புரிந்துவிடும் என்று அரசியல்வாதிகளும் விரட்டிக்கொண்டே இருக்கிறார்கள் ,
வாழ்க ஜனநாயகம்! வாழ்க மக்களாட்சி!! ....

நன்றி ..

கருத்துகள் இல்லை: