25 ஜன., 2009

''ராமசாமி'' அத்தியாயம் 1

நான் நான்கு வயதுவரை அம்மாவிடம் பால் குடித்தவன் , என்னை மறக்கவைக்க எவ்வளவோ முயற்சி செய்தனர் ,காம்பில் வேப்பன்னை தடவி வைத்துதான் மறக்கடித்தனர் .

நான்தான் வீட்டில் கடைசி அதனால் செல்லம் அதிகம் ,நான்கு சகோதரிகள் ,ஒரு சகோதரன் , ஆனால் போகபோகத்தான் தெரிந்தது அண்ணனுக்கே அதிக முன்னுரிமை என்று.. ஆனால் என்னோட உலகம் வேறாக இருந்தது .. எப்போதும் விளையாட்டுதான் .. அவனுடைய வீடு இருக்கும் தெருவில் அனேகமாக எல்லோரும் மாமாக்கள் வீடுதான் .. எல்லாவீட்டிலும் என்னிடம் தனிப்பாசம் கொண்டிருந்தனர் , ஏன்னா நான் ஏறாத மரம் கிடையாது , தம்பிதான் மறுக்காம உதவி பண்ணும் என்று சொல்லியே எல்லாவேலையும் என்னிடம் வாங்கிவிடுவார்கள் . தேங்கா , மாங்கா , முருங்கைக்காய் பறிக்கிறது ,கடைகன்னிக்குப்போறது இப்படியாக வீட்டில் எந்த வேலையும் செய்யாத நான் .. எல்லோர் வீட்டிற்கும் வேலைக்காரன் ஆகிப்போனேன் ..

அப்பல்லாம் நான் ஒன்னாப்பு படிக்கயில என்னக்கு மட்டும் ஒரு பலக வேணுன்னு அடம்புடிப்பேன் , என்னோட கட்ட டீச்சரும் (நாங்க இப்படித்தான் கூப்புடுவோம் )எனக்கு ஒரு பலகைய கொடுப்பாங்க, அப்பல்லாம் உக்கார பலகைதான் கொடுப்பார்கள் ..என்னோட விருப்பத்துக்குதான் ஸ்கூலுக்கு போவேன் , வீட்டுக்கு வரணும்ன்னு நெனச்சா உடனே பைய தூக்கிட்டு கெளம்பிடுவேன் .. அப்படிதான் ஒரு நாள் வீட்டுக்கு வர்றப்ப என்னோட தாய்மாமா டேப்பன் (எல்லோரும் அவரை அப்படித்தான் கூப்பிடுவார்கள் ) பாத்துட்டு அடி பின்னி எடுத்துட்டார் , அதன்பிறகு ஒழுங்கா பள்ளிக்கு போக ஆரம்பிச்சேன் ..

அப்புறம் நான் அஞ்சாப்பு படிக்கயில என்னோட செட்டுங்க ரொம்ப பெருசு , வயசு வித்தியாசம் இல்லாம எல்லோரும் விளையாடுவோம் ..அப்படிதான் ஒருமுறை நாங்க எல்லோரும் சேந்து காசு சேத்தோம், பொதுவான ஒரு எடத்துல உண்டியல் புதைத்து வைக்கப்பட்டது , ஆனால் திடீரென உண்டியல் ஒருநாள் காணாமல் போனது ..

என்னோட மாமா வீட்டு தோப்புல வெளியூருல இருந்து பிழைப்புதேடி வந்த ஒரு குடும்பம் இருந்தது , அந்த வீட்டு பையன் நான்தான் அந்த உண்டியல திருடியதாகவும் அதை தன் கண்ணால் பார்த்ததாகவும்சொன்னதால் ,எல்லோரும் என்னை கூட்டி பஞ்சாயத்து வைத்தனர் ,
நான் எவ்வளவோ மறுத்தும் ,சத்தியம் செய்தும் யாரும் என்னை நம்பவில்லை ,
என்னோட அம்மாவும் , சத்தி வீட்டு தாத்தாவும் (சத்தி அத்தான் பத்தி பின்னாடி சொல்றேன் ) மட்டும் நம்பினார்கள்.
ஆனாலும் என் சேக்காலிங்க நம்பாததால் , அம்மாவே அவர்களுக்கு கணக்கு சொன்ன இருவது ரூபாயும் கொடுத்தாங்க ..

அதன்பிறகு என் செட்டுங்க யாரும் என்கிட்டே பேசுறது கிடையாது . நான் கடைக்கு போகும்போதெல்லாம் என்னைபாத்து ''திருடன் போறான்னு " கத்துவாங்க ,

ஸ்கூல் விட்டுவந்து அவங்களோட விளையாட முடியாது , அத தவிர்ப்பதற்காக,ஸ்கூல் விட்டவுடன் நூலகம் செல்ல ஆரம்பித்தேன் , அப்படித்தான் நான் படிப்பாளி ஆனேன் ,

இப்படி சில மாசம் போன பின்னாடி ஒரு நாள் ஸ்கூல்ல இருக்கும்போது என்னோட அப்பா மற்றும் என்னை நான்தான் திருடினேன் என்று சொன்ன பையன் , அவனோட அப்பா ,அம்மா மற்றும் அவனோட தங்கச்சி எல்லோரும் வந்து என்னை ஹெட்மாஸ்ட்டர் ரூமுக்கு கூட்டிட்டு போனாங்க , அங்க என்னை திருடன்னு சொன்ன பையன் அவனோட தங்கச்சிய நான் கருக்கருவளால் (கதிர் அறுக்கும் அருவாள் ) வெட்டிவிட்டேன் என்று சொன்னான் , ஆனால் என் வகுப்பு ஆசிரியரோ அவனை விசாரித்து கேட்டபோது அவன் நான் காலை பதினோரு மணி அளவில் வெட்டியதாக சொன்னான் , அப்போது நான் பள்ளியில் இருந்ததால் அவன் என்மேல் பொய் சொல்கிறான் என்று தெரிந்து அவனோட அப்பா ,அம்மா அவன செமையா சாத்துனாங்க ..

அப்புறம் இது என்னோட செட்டுங்களுக்கு தெரிஞ்சு அவங்களும் அவன புடிச்சு அடிச்சப்பதான் தானே திருடிவிட்டு என் மேல் பழிசுமத்தியதை ஒப்புக்கொண்டான். என் சேக்காலிங்க என்கிட்டே மன்னிப்பு கேட்டு மறுபடியும் செட்டுல சேத்துகிட்டங்க ..,

ஆனாலும் என்னோட ஆர்வம் லைப்ரரி மேல மாறிப்போனதால் என் மாமா அவரோட உறுப்பினர் அட்டையை கொடுத்து , என்னையும் உறுப்பினராக சேத்துவிட்டார் ..

இன்னைக்கு வரை தீவிர படிப்பளியாக நான் மாற காரணமான அந்த பையனுக்குதான் நன்றி சொல்லணும் ...

அடுத்த அத்தியாயம் என்னோட முதற்காதல் பத்திதான் .....

இத்தொடர் தமிழ்குறிஞ்சி இணைய இதழிலும் வெளியாகிறது"



கருத்துகள் இல்லை: