17 டிச., 2008

பொம்மலாட்டம்

நீண்ட நாளைக்கு பிறகு வந்துள்ள பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படம் பார்த்தேன் ( T.nagar krishnaveni theatre ), சும்மா சொல்லக்கூடாது படம் ஆரம்பிச்சதுல இருந்து ஒரே கொசுத்தொல்லை போங்க , நாங்களும் பாரதிராஜா படம் ஆச்சேன்னு படம் முடியிறவரை சகிச்சுக்கிட்டோம்,
நானா படேகர் நடிப்பு அற்புதம் , அப்புறம் ஒரு சாதரண கொலை கேசுக்கு ஏன் மத்திய புலனாய்வு குழு (C.B.I) வர்ராங்கன்னு தெரியல ,
இந்த படத்துக்கு முன்னாடி "கண்களால் கைது செய் " படத்துல வர்ற flash back போலவே இந்த படத்துலயும் பிச்சு பிச்சு போட்டுருப்பார் ,
மிகசரியான ஒரு கதை ஆனால் ஹோலிவூட் ஸ்டைலில் எடுத்திருக்கிறார்
இது ஒரு சராசரி சினிமா ரசிகனை போய் சேருமா?
மணிவண்ணன் அவருக்கு குடுத்த விஷயத்தை நன்றாக செய்துள்ளார் ,
காஜல் அகர்வால் கவிஞர் ஆக வருகிறார் , அவருக்கு இன்னும் கொஞ்சம் வாய்ப்பு கொடுத்திருக்கலாம் , விவேக் கொஞ்ச நேரமே வந்தாலும் சிரிக்க வைக்கிறார் ,அர்ஜுன் செய்யும் investication இன்னும் கொஞ்சம் நன்றாக செய்திருக்கலாம் , நானா படேகரை விசாரிக்கும்போது நானே படேகர் அர்ஜுனை திருப்பி தாக்குவது அதற்க்கு அர்ஜுன் நெளிவது இங்கெல்லாம் பாரதிராஜா பிரமாதபடுத்தி இருக்கிறார் , இசை சுமார்தான் , ஹிந்தியிலும் எடுப்பதற்க்காக சில இடங்களில் தமிழ் ரசிகனை குழப்புகிறார் ,
கதா நாயகி ருக்மணி நல்ல தேர்வு , ஒரிஜினல் திருநங்கை ஒருவரை நடிக்க வைத்திருக்கலாம், ரஞ்சிதா கட்சிதம் , நாம் படிக்கிற சினிமா கிசு கிசுவெல்லாம் நிஜம்தான் போல.
மொத்தத்தில் சராசரி தமிழ் ரசிகனை சென்று சேரும்படி இல்லை என்றாலும் இதனை தைரியமாக வுலக சினிமாவுடன் ஒப்பிடலாம் ,
இருந்தாலும் எங்களுக்கு முதல் மரியாதையை தந்த பாரதிராஜாவே வேண்டும்
நானா படேகர் வரும்போதல்லாம் பாரதிராஜாவே தெரிகிறார் , நிழல்கள் ரவி குரல் கொடுத்துள்ளார் ,
நேரம் கிடைத்தால் அவசியம் சென்று பாருங்கள் ,
நன்றி ....







கருத்துகள் இல்லை: